ஆப்நகரம்

சர்ச்சைப் பேச்சால் அமைச்சர் அலுவலகத்தில் குடியேறிய விவசாயிகள்!

வறட்சியால் விவசாயிகள் இறக்கவில்லை என பேசி சர்ச்சையை கிளப்பிய திருச்சி அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அலுவலகத்தில் குடியேறி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

TOI Contributor 9 Jan 2017, 7:15 pm
திருச்சி : வறட்சியால் விவசாயிகள் இறக்கவில்லை என பேசி சர்ச்சையை கிளப்பிய திருச்சி அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அலுவலகத்தில் குடியேறி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
Samayam Tamil farmers protest against tn minister for his speech
சர்ச்சைப் பேச்சால் அமைச்சர் அலுவலகத்தில் குடியேறிய விவசாயிகள்!


கடந்த ஜனவரி 6-ம் தேதி திருச்சியில் வறட்சியால் பாதிக்கப்பட்ட நிலங்களை அரசு தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, எம்.பி.,க்கள் குமார், ரத்தினவேல், மருதைராஜா, மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிச்சாமி ஆகியோர் அடங்கிய குழு பார்வையிட்டது.

இதன்பின் பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், "திருச்சியில் வறட்சியால் விவசாயிகள் இறக்கவில்லை. இதுவரை அரசுக்கு அதுபோல் எந்த தகவலும் வரவில்லை" என்று பேசினார். தவிர, அமைச்சர் சம்பத்தும் விவசாயிகளின் மரணம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தையே தெரிவித்திருந்தார்.

அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் இந்த பேச்சுக்கு விவசாயிகள் சங்கங்த்தினர் கண்டனம் தெரிவித்தனர். தவிர இது போல சர்ச்சைக்குரிய முறையில் பேசும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என கோரிக்கை வைத்துள்ளனர்.

அமைச்சரின் இந்த பேச்சால் கடுப்பான விவசாயிகள், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சின்னதுரை தலைமையில், அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் குடியியேறும் போராட்டம் நடத்தினர். தவிர, அமைச்சருக்கு எதிராக கோஷங்களும் எழுப்பினர். இந்த தகவல் அறிந்த போலீசார் அங்கு கூட நிலைமை பரபரப்பானது

இது குறித்து விவசாயிகள் சங்க திருச்சி தலைவர் சின்னதுரை கூறுகையில், ’திருச்சியில் இதுவரை 4 விவசாயிகள் வறட்சி காரணமாக உயிரிழந்துள்ளனர். இதற்காக தமிழக விவசாயிகள் சங்கம் உட்பட பல அமைப்புகள், அவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் ஊடகங்கள் முன்னிலையில், விவசாயிகள் வறட்சியின் காரணமாக இறக்கவில்லை என வெல்லமண்டி நடராஜன், எம்.சி. சம்பத் பேசியிருப்பது வேதனை அளிக்கிறது. அவர்கள் தங்கள் கருத்தை வாபஸ் பெறவேண்டும். தவிர, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடும் வழங்க வேண்டும். அமைச்சர்கள் வாபஸ் வாங்கவில்லை என்றால் அடுத்தகட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம்’’ என எச்சரித்தார்.

அடுத்த செய்தி