ஆப்நகரம்

விவசாய கடனை தள்ளுபடி செய்யாமல் தமிழகம் திரும்ப மாட்டோம் : விவசாயிகள்

விவசாயி கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை தமிழகம் திரும்ப மாட்டோம் என்று டெல்லியில் ஜந்தர் மந்தரில் போராடிவரும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

TNN 28 Mar 2017, 11:04 pm
டெல்லி : விவசாயி கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை தமிழகம் திரும்ப மாட்டோம் என்று டெல்லியில் ஜந்தர் மந்தரில் போராடிவரும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil farmers protest in delhi
விவசாய கடனை தள்ளுபடி செய்யாமல் தமிழகம் திரும்ப மாட்டோம் : விவசாயிகள்



வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கடந்த 16 நாட்களாக டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள்போராடி வருகின்றனர்.

விவசாயிகளின் போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள் , நடிகர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வரருகின்றனர். மேலும் இவர்களுக்கு உத்தரபிரதேசம், ஹரியானா, பஞ்சாப் பகுதியை சேர்ந்த விவசாயிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் விவசாயிகள் இன்று மத்திய நிதி அமைச்சர் அரூண் ஜெட்லியை சந்திந்து தங்களது மனுக்களை அளித்தனர். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு, " எங்களது கோரிக்கையை மத்திய அமைச்சரிடம் முன் வைத்தோம். விவசாய கடனை தள்ளுபடி செய்வது உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை தமிழகம் திரும்ப மாட்டோம் "என்று அவர் தெரிவித்தார்.

Farmers Protest in delhi

அடுத்த செய்தி