ஆப்நகரம்

காவிரி நீரை பெற்றுத்தர வலியுறுத்தி தமிழகத்தில் இன்று முழு அடைப்புப் போராட்டம்

காவிரி நீரை பெற்றுத்தர வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

TNN 30 Aug 2016, 7:34 am
சென்னை: காவிரி நீரை பெற்றுத்தர வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil farmers protest in tamilnadu for cauvery water issue
காவிரி நீரை பெற்றுத்தர வலியுறுத்தி தமிழகத்தில் இன்று முழு அடைப்புப் போராட்டம்


சம்பா சாகுபடிக்கு காவிரி நீரை கர்நாடகத்தில் இருந்து பெற்றுத்தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்புப் போராட்டத்திற்கு தமிழக விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த போராட்டத்திற்கு திமுக, காங்கிரஸ், தமாகா, விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி, தமிழ் தேசிய முன்னணி உள்ளிட்ட கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் வர்த்தக அமைப்பும் ஆதரவு அளித்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் இன்று கடைகள் திறக்கப்படாது.

வணிகர் சங்கங்கள், லாரி உரிமையாளர் சங்கம் உள்ளிட்டவையும் முழு அடைப்பு போராட்டத்திற்கு தங்கள் ஆதரவை அளித்துள்ளன.

அடுத்த செய்தி