ஆப்நகரம்

“வெற்றி பெறாமல் தமிழகம் திரும்பமாட்டோம்” : விவசாயிகள் உறுதி!

“வெற்றி பெறாமல் தமிழகம் திரும்பமாட்டோம்” : விவசாயிகள் உறுதி!

TOI Contributor 27 Mar 2017, 8:36 am
டெல்லி : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் 14 நாட்களாக போராடி வரும் நிலையில், போராட்டத்தில் வெற்றி பெறாமல் தமிழகம் திரும்ப மாட்டோம் என்று விவசாயிகள் உறுதியாக கூறியுள்ளனர்.
Samayam Tamil farmers protest spreads various places
“வெற்றி பெறாமல் தமிழகம் திரும்பமாட்டோம்” : விவசாயிகள் உறுதி!


வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கடந்த 14 நாட்களாக டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராடி வருகின்றனர். இவர்களுக்கு உத்தரபிரதேசம், ஹரியானா, பஞ்சாப் பகுதியை சேர்ந்த விவசாயிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து திருச்சியில் விவசாயிகள் உண்ணாவிரதம் இருக்க முயற்சி செய்தனர். ஆனால் காவல்துறையினரால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் திருச்சியில் விவசாயிகள் அனைவரும் ஒன்று கூடி தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி