ஆப்நகரம்

தொடரும் தமிழக விவசாயிகள் வேதனை; அரை மொட்டை அடித்து நூதன போராட்டம்...!

தமிழக விவசாயிகள் அரை மொட்டை அடித்து, டெல்லியில் போராடி வருகின்றனர்.

TNN & Agencies 23 Jul 2017, 2:00 pm
டெல்லி: தமிழக விவசாயிகள் அரை மொட்டை அடித்து, டெல்லியில் போராடி வருகின்றனர்.
Samayam Tamil farmers protest with half shave in delhi
தொடரும் தமிழக விவசாயிகள் வேதனை; அரை மொட்டை அடித்து நூதன போராட்டம்...!


டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் போராடி வந்தனர். தங்களின் போராட்டத்தை சிறிது காலத்திற்கு ஒத்திவைத்த அவர்கள், தற்போது மீண்டும் களம் கண்டுள்ளனர். அவர்கள் பயிர்க்கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக பல்வேறு வகையான போராட்டங்களை தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் 7வது நாளான நேற்று, அரை மொட்டை அடித்து போராடினர். ஜந்தர் மந்தர் பகுதியில் ஊர்வலமாக சென்ற அவர்கள், அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இந்தப் போராட்டத்திற்கு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார். இதற்கிடையில் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளனர்.

Farmers protest with half shave in Delhi.

அடுத்த செய்தி