ஆப்நகரம்

கதிராமங்கலத்தில் விவசாயிகள் கடையடைப்பு...!!

கதிராமங்கலத்தில் கைது செய்யப்பட்டுள்ளவர்களை விடுவிக்க வலியுறுத்தி, விவசாயிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

TNN 1 Jul 2017, 12:33 pm
கதிராமங்கலத்தில் கைது செய்யப்பட்டுள்ளவர்களை விடுவிக்க வலியுறுத்தி, விவசாயிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Samayam Tamil farmers shop closed in kathiramangalam
கதிராமங்கலத்தில் விவசாயிகள் கடையடைப்பு...!!


கதிரமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு எதிராக சாலைமறியலில் ஈடுபட்ட மீத்தேன் எதிர்ப்பு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், உள்ளிட்ட 9 கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்து கதிரமங்கலத்தில் 400க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.

இதனையடுத்து அங்கு அசம்பாவித சம்பவங்க மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜன் தலைமையில், தஞ்சை , திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில், 300க்கும் மேற்பட்ட போலீசார், கதிரமங்கலத்தில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அடுத்த செய்தி