ஆப்நகரம்

விவசாயிகள் இன்று தமிழகம் வருகை: முழு அடைப்பிலும் பங்கேற்பு

தலைநகர் டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தை தற்காலிக வாபஸ் பெற்று, அங்கிருந்து புறப்பட்ட விவசாயிகள், இன்று தமிழகம் வந்தடையவுள்ளனர்.

TNN 25 Apr 2017, 3:50 am
சென்னை: தலைநகர் டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தை தற்காலிக வாபஸ் பெற்று, அங்கிருந்து புறப்பட்ட விவசாயிகள், இன்று தமிழகம் வந்தடையவுள்ளனர்.
Samayam Tamil farmers will reach tamilnadu today also they are going to participate in full shutdown protest
விவசாயிகள் இன்று தமிழகம் வருகை: முழு அடைப்பிலும் பங்கேற்பு


தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க நடவடிக்கை வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள், டெல்லியின் ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த போராட்டத்துக்கு, பல்வேறு மாநில விவசாயிகள், அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள், பொதுமக்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்தனர்.

கடந்த மாதம் 14-ம் தேதியன்று தொடங்கிய இந்த போராட்டம் கடந்த 41 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்தது. தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, தினம் தினம் வெவ்வேறு வடிவில் விவசாயிகள் போராடி வந்தனர்.

இதனிடையே, முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கைகளை ஏற்று தங்களது போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக விவசாயிகள் அறிவித்தனர். எனினும், கோரிக்கைகள் நிறைவேறவில்லை எனில், மீண்டும் டெல்லியில் போராட்டம் தொடரும் என போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், விவசாயிகளுக்கு ஆதரவாக ஏப்ரல் 25-ம் தேதி (இன்று) நடைபெறவுள்ள முழு அடைப்பு போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாகவும் அய்யாகண்ணு அறிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, போராட்டத்தை தற்காலிக வாபஸ் பெற்ற விவசாயிகள், டெல்லியில் இருந்து ரயில் மூலம் நேற்று முன்தினம் இரவு சென்னை புறப்பட்டனர். இந்நிலையில், தமிழ்நாடு விரைவு ரயில் மூலம் சென்னை புறப்படத் விவசாயிகள் இன்று தமிழகம் வந்தடையவுள்ளனர். அத்துடன் முழு அடைப்பு போராட்டத்திலும் அவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
Farmers will reach tamilnadu today; also they are going to participate in full shutdown protest

அடுத்த செய்தி