ஆப்நகரம்

குடிபோதையில் அட்டகாசம் செய்த மகனை கொன்ற தந்தை

ஈரோடு மாவட்டம் அருகே குடிபோதையில் தகராறு செய்த மகனை கல்லால் அடித்து தந்தை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN 28 Dec 2016, 11:16 am
ஈரோடு: ஈரோடு மாவட்டம் அருகே குடிபோதையில் தகராறு செய்த மகனை கல்லால் அடித்து தந்தை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil father kills drunken son in erode
குடிபோதையில் அட்டகாசம் செய்த மகனை கொன்ற தந்தை


கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கலராமணியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றி வரும் மாரியப்பன் என்பவரது திருமணமாகாத இளைய மகன் ஜெகநாதன் ஆவார். இவர், இறைச்சிக்கடையில் வேலைப்பார்க்கும் ஜெகநாதன், பகுதி நேரமாக இருச்சக்கர வாகனங்களில் பழுது நீக்கும் தொழிலும் செய்துவருகிறார். இந்நிலையில், குடிக்கு அடிமையான ஜெகநாதன் தனது தந்தையுடன் அவ்வப்போது தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் அளவுக்கு அதிகமான குடிபோதையில் வீட்டிற்கு வந்த ஜெகநாதன், தகாத வார்த்தைகளால் தந்தையை திட்டியுள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி தந்தையை கொலை செய்யும் நோக்கில் தாக்கியுள்ளார். அவரிடம் இருந்து தப்பிக்க தற்காப்புக்காக அருகில் கிடந்த கல்லை எடுத்து ஜெகநாதனை தாக்கியுள்ளார்.

இந்தத் தாக்குதலில், எதிர்பாராத விதமாக ஜெகநாதனின் தலையில் கல் பட்டு படுகாயம் ஏற்பட்டதால், சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இவர்களின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, ஜெகநாதன் உயிரிழந்து கிடந்துள்ளார்.

இதையடுத்து கோபி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட ஜெகநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக மாரியப்பனிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Fed up with drunken brawls of his son, a 50-year-old man killed him by hitting him on his head with a stone at Gobichettipalayam, Erode district.

அடுத்த செய்தி