மணப்பாறையில் பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் கரும்பு வெட்டும் கூலி தொழிலாளி நாகராஜ். இவரது மனைவி பரிமளா. இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகனும் உள்ளனர். இவர்களில் மூத்த மகள் 8ம் வகுப்பு படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு பெற்றோர்களுக்கு உதவியாக கரும்பு வெட்டும் தொழிலுக்கு சென்று வருகிறார்.
இந்நிலையில், அரியலூர் பகுதியில் தங்கி கரும்பு வெட்டும் வேலையில் ஈடுபட்டிருந்த போது இரவு நேரத்தில் நாகராஜ் தனது மூத்த மகளை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனைக் கண்ட தாய் பரிமளா சத்தம் போட அங்கிருந்து நாகராஜ் ஓடிவிட்டார்.
அதன் பிறகு சிறிது நாட்கள் கழித்து வீட்டிற்கு திரும்பிய நாகராஜ் மனைவியிடம் நடந்தவற்றிற்கு மன்னிப்பு கோரியதுடன் மகளை பள்ளியில் சேர்ப்பதாக கூறி அழைத்து சென்றுள்ளார். அப்போது, மணப்பாறையில் உள்ள தங்கும் விடுதியில் வைத்து மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது, அங்கிருந்து தப்பி வந்த சிறுமி தனது தாயிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக கோபத்தில் கொந்தளித்த பரிமளா, நாகராஜ் மீது மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் நாகராஜ் மீது பேஸ்கோ சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிபதியின் உத்தரவின் கீழ் நாகராஜை சிறையில் அடைத்தனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் கரும்பு வெட்டும் கூலி தொழிலாளி நாகராஜ். இவரது மனைவி பரிமளா. இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகனும் உள்ளனர். இவர்களில் மூத்த மகள் 8ம் வகுப்பு படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு பெற்றோர்களுக்கு உதவியாக கரும்பு வெட்டும் தொழிலுக்கு சென்று வருகிறார்.
இந்நிலையில், அரியலூர் பகுதியில் தங்கி கரும்பு வெட்டும் வேலையில் ஈடுபட்டிருந்த போது இரவு நேரத்தில் நாகராஜ் தனது மூத்த மகளை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனைக் கண்ட தாய் பரிமளா சத்தம் போட அங்கிருந்து நாகராஜ் ஓடிவிட்டார்.
அதன் பிறகு சிறிது நாட்கள் கழித்து வீட்டிற்கு திரும்பிய நாகராஜ் மனைவியிடம் நடந்தவற்றிற்கு மன்னிப்பு கோரியதுடன் மகளை பள்ளியில் சேர்ப்பதாக கூறி அழைத்து சென்றுள்ளார். அப்போது, மணப்பாறையில் உள்ள தங்கும் விடுதியில் வைத்து மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது, அங்கிருந்து தப்பி வந்த சிறுமி தனது தாயிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக கோபத்தில் கொந்தளித்த பரிமளா, நாகராஜ் மீது மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் நாகராஜ் மீது பேஸ்கோ சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிபதியின் உத்தரவின் கீழ் நாகராஜை சிறையில் அடைத்தனர்.