ஆப்நகரம்

பெற்ற மகளை கர்ப்பமாக்கிய தந்தை- திண்டுக்கல்லில் கொடூரம்

பெற்ற மகளை தந்தை ஒருவர், பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 10 Nov 2018, 10:13 am
திண்டுக்கல் மாவட்டத்தில் பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தையை போலீஸார் போக்சோ சட்டத்தின் கைது செய்தனர்.
Samayam Tamil pokso-cover-pic
பெற்ற மகளுக்கு தந்தை செய்த கொடூரம்


ஒட்டன்சத்திரம் அருகே உள்ள நரிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன். தனியார் பஞ்சாலையில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜோதி கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியூர் சென்றிருந்தார்.

அப்போது பாலமுருகன், தனது 14 வயது மகளை நாள்தோறும் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறுமி ஐந்து மாதம் கர்ப்பணியானார்.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த தாய் ஜோதி, தனது கணவர் மீது ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

உடனடியாக சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், பாலமுருகனை கைது செய்தனர். பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.

அடுத்த செய்தி