ஆப்நகரம்

பிப்ரவரி 19: தமிழ்நாட்டில் கொரோனா நிலவரம்... மாவட்டம் வாரியாக

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 19 Feb 2021, 10:57 pm
தமிழகத்தில் இன்றைய (19-02-2021) கொரோனா நிலவரத்தை மாவட்ட வாரியாக பாப்போம்.
Samayam Tamil file pic



தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 448 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றுடன் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,47,385 ஆக அதிகரித்துள்ளது. இது நீங்கலாக இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களில் மொத்தம் 36 பேருக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 20 பேருக்கும் உருமாறிய வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் தற்போது 4,147 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 136 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 234072 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 228315 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 4134 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவையில் இன்று 49 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 55368 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 54282 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 679 பேர் பலியாகியுள்ளனர். தற்போது 407 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை. இதுவரை இங்கு 2281 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 2254 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது 6 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கமல் இரு தொகுதிகளில் போட்டியிடுகிறாரா?

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 52,124 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 1,67,05,058 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இன்று 467 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் இதுவரை குணமானோர்களின் எண்ணிக்கை 8,30,787 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 12,451 ஆக உயர்ந்துள்ளது.

அடுத்த செய்தி