ஆப்நகரம்

மாணவர்கள் ஹேப்பி: அமைச்சர் சொன்ன குட் நியூஸ்!

பாலிடெக்னிக் கல்லூரிகளின் கட்டணம் குறைக்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்

Samayam Tamil 13 Apr 2022, 1:11 pm
தமிழக சட்டப்பேரவையில் 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த 18ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன்பிறகு, தள்ளி வைக்கப்பட்ட சட்டப்பேரவை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்த கூடியுள்ளது. மே மாதம் 10ஆம் தேதி வரை நடக்கும் கூட்டத்தொடரில் துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் விவாதம் நடைபெற்று வருகிறது.
Samayam Tamil மாணவர்கள்
மாணவர்கள்


அந்த வகையில், சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது, மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம்குமரவேல், அச்சிறுபாக்கத்தில் பலவகை தொழில்நுட்ப கல்லூரி அமைக்க வேண்டுமென கோரினார்.

அதற்கு பதிலளித்து பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள் 509 இருக்கின்றது, அதில் முழுமையான இடங்கள் நிரம்பவில்லை. மாணவர்கள் சேர்க்கையும் குறைவாக இருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பல பாலிடெக்னிக் கல்லூரிகள் இருக்கிறது. அங்கும் காலியிடங்கள் அதிகமாக இருக்கின்றன என்றார்.

தொடர்ந்து பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பாலிடெக்னிக் கல்லூரியின் கட்டணத்தை குறைக்க அரசு நடவடிக்கைகள் எடுக்கவிருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், பாலிடெக்னிக் படிக்கும் மாணவர்கள் நேரடியாக அண்ணா பல்கலைக்கழகத்திலும் பொறியியல் இரண்டாம் ஆண்டு சேர அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

திருவள்ளுவர் பல்கலைக்கழக முறைகேடு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!
பாலிடெக்னிக் படிக்கும் மாணவர்களுக்கு வசதியாக அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் பொறியியல் இரண்டாம் ஆண்டு நேரடியாக சேரும் வசதி இருந்து. ஆனால், அது நிறுத்தபட்டிருந்தது. அது தற்போது மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரபட்டுள்ளது, இதன்மூலம் பாலிடெக்னிக் படிக்கும் மாணவர்கள் பொறியியல் படிக்கும் ஆசை இருந்தால் அவர்கள் 2ஆம் ஆண்டு சேர்ந்து படிக்கலாம் என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

அடுத்த செய்தி