ஆப்நகரம்

மின்சாரம் தாக்கி 2 யானைகள் உயிரிழப்பு

மேட்டுப்பாளையம் அருகே தாசம்பாளையத்தில் மின்சாரம் தாக்கி இரண்டு யானைகள் உயிரிழந்தது.

TNN 17 Jan 2017, 2:33 pm
கோவை: மேட்டுப்பாளையம் அருகே தாசம்பாளையத்தில் மின்சாரம் தாக்கி இரண்டு யானைகள் உயிரிழந்தது.
Samayam Tamil female elephant calf electrocuted in tamil nadu
மின்சாரம் தாக்கி 2 யானைகள் உயிரிழப்பு


சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் யானை மற்றும் அதன் 6 வயது குட்டியுடன் மேட்டுப்பாளையம் வனப்பகுதிக்கு உட்பட்ட நெல்லிமலை அருகே விவசாய நிலத்தில் உள்ள உயர் மின் அழுத்த கம்பியில் சிக்கிய யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்தது.

பழனிச்சாமி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில், வன விலங்குகள் நுழைந்து பயிரை சேதப்படுத்தாமல் இருக்க உயர் அழுத்த மின் கம்பிகள் போடப்பட்டிருந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாவட்ட வனத்துறை அதிகாரி ராமசுப்ரமணியன், மேட்டுப்பாளையம் வனப்பகுதி அதிகாரி நாசிர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

The carcasses of a 30-year-old female elephant and its six-year-old male calf were found in a farmland at Thasampalayam in Tamil Nadu on Tuesday morning.

அடுத்த செய்தி