ஆப்நகரம்

திருச்சியில் படிக்கும் உகாண்டா மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி!

உகாண்டாவை சேர்ந்த மாணவியை அடையாளம் தெரியாத நபர் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN 10 Jul 2017, 10:56 pm
திருச்சி : உகாண்டாவை சேர்ந்த மாணவியை அடையாளம் தெரியாத நபர் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil female student from uganda escapes sexual assault bid in trichy
திருச்சியில் படிக்கும் உகாண்டா மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி!


உகாண்டாவை சேர்ந்த மாணவி ஒருவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர் உறையூர் அருகே அபார்ட்மெண்ட் ஒன்றில் வீடு எடுத்து கடந்த ஒரு வருடமாக தனியாக தங்கியுள்ளார். இந்நிலையில் அதிகாலை 1 மணி அளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளார்.

தூங்கிக்கொண்டிருந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார். உஷாரான மாணவி கூச்சலிட்டுள்ளதை அடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மாணவியை காப்பாற்ற வந்துள்ளனர். இதனையடுத்து அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

அரசு மருத்துவமனை காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்ததை அடுத்து காவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்பார்ட்மெண்டில் சிசிடிவி இல்லை என்பதால் குற்றவாளியை கண்டுபிடிக்க தாமதம் ஏற்பட்டுள்ளது. குற்றவாளி உள்ளூரை சேர்ந்த நபராக இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
ஆனால் பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து வழக்கு ஏதும் பதிய தேவையில்லை என்று கேட்டுக்கொண்டுள்ளார். இதனால் வழக்கு எதுவும் பதியப்படவில்லை என்று அரசு மருத்துவமனை துணை காவல் ஆய்வாளர் கோபால் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி