ஆப்நகரம்

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டணம் உயர்வு: அரசின் அதிர்ச்சி நடவடிக்கை

அரசு விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 28 Oct 2021, 6:01 pm
ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்களுக்கு பண்டிகை நாட்களில் வழங்கப்படும் சிறப்பு உணவுக்கட்டணம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
Samayam Tamil கோப்புப்படம்


தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட பள்ளிகளில் தங்கி கல்வி பயிலும் மாணவர்களுக்கு பண்டிகை நாட்களில் வழங்கப்படும் சிறப்பு உணவுக்கான கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.

அதுகுறித்து ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் மாணவர்/ மாணவியர்களுக்கு பண்டிகை நாட்களில் வழங்கப்படும் சிறப்பு உணவு கட்டணத் தொகை பள்ளி மாணவர்களுக்கு 40 ரூபாய் ஆகவும், கல்லூரி விடுதி மாணவர்களுக்கு 80 ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.


அரசு விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு பண்டிகை நாட்களில் அசைவ உணவுகள் வழங்கப்படுவது வழக்கம். குறிப்பாக தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகிய பண்டிகைகளுக்கு சிறப்பான உணவுகள் சமைக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

'அம்மா உணவகம்' திட்டத்தை திமுக நீர்த்துப்போகச் செய்கிறதா?

இந்த உணவு கட்டணத்தை அரசே உயர்த்தியிருப்பது அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பட்டியலின, பழங்குடியினர் போன்ற அடித்தட்டு மாணவர்களிடம் உணவு கட்டணத்தை உயர்த்தப்பட்டிருப்பதை அவர்கள் விரும்பவில்லை.

அடுத்த செய்தி