ஆப்நகரம்

மீன் பிடிக்கச் சென்ற போது காய்ச்சல் பாதிக்கப்பட்டு மீனவர் பரிதாப பலி

கன்னியாகுமரி: பதினோரு பேருடன் மீன் பிடிக்கச் சென்ற போது ஆழ்கடல் பகுதியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மீனவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 8 Jan 2019, 10:29 pm
பதினோரு பேருடன் மீன் பிடிக்கச் சென்ற போது ஆழ்கடல் பகுதியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மீனவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil ஆழ்கடலில் காய்ச்சலால் மீனவர் உயிரிழப்பு


கன்னியாகுமரி வல்லவிலை பகுதியை சேர்ந்த பென்னிட்ரோ (35) என்பவர், கடந்த 4ம் தேதி பதினொரு பேருடன் சேர்ந்து கேரளாவுக்கு மீன் பிடிக்கச் சென்றார். தொடர்ந்து 6ம் தேதி பதினொரு பேருடன் ஆழ்கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டது. மற்ற மீனவர்கள் அவரை திருப்பி அனுப்புவதற்கு முயன்ற போது அவர்களால் முடியவில்லை. அதை தொடர்ந்து படகை இயக்கி கரைக்கு திரும்ப முயன்றனர்.

இந்நிலையில் திங்கட்கிழமை படகு கரையை நெருங்கிய போது, வல்லவிலை பகுதியை எட்டிய நிலையில் பென்னிட்ரோ இறந்துவிட்டது தெரியவந்தது. அதை தொடர்ந்து இந்த மரணம் தொடர்பாக கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்டது.

வல்லவிலை பகுதிக்கு வந்த அவர்கள் பென்னிட்ரோவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்த மீனவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

அடுத்த செய்தி