ஆப்நகரம்

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!

தமிழகம் மற்றும் புதுவையில் இன்று ஒரு சில இடங்களில் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 3 Sep 2019, 8:47 am
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!


வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று பகல் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், இரவில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

புதுக்கோட்டை மாவட்டத்தின் வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், கீரமங்கலம் உள்ளிட்ட இடங்களில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. அதேபோல் சேலம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து நகர் முழுவதும் குளிர்ச்சியான வானிலை நிலவியது.

அமெரிக்காவில் கால் பதித்த தமிழக முதல்வர்- விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

இதனிடையே சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியிருப்பதாவது:

வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதனாலும் மேல் அடுக்கு சுழற்சி தமிழகத்தில் நிலவி வருவதாலும் தமிழகம் மற்றும் புதுவையில் இன்று ஒரு சில இடங்களில் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும்.

குறிப்பாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

MK Stalin: அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் மு.க.ஸ்டாலின், தளபதி விஜய் சந்திப்பு!

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், நாகை, தேனி, திண்டுக்கல், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும்.

சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ப.சிதம்பரத்திற்கு சிபிஐ காவல் மேலும் நீட்டிப்பு- டெல்லி சிறப்பு நீதிமன்றம்!

அடுத்த செய்தி