ஆப்நகரம்

மின் கட்டணம் செலுத்த அவகாசம்: அமைச்சர் சொன்ன சூப்பர் நியூஸ்!

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 12 Nov 2021, 7:55 am
நவம்பர் 6ஆம் தேதி முதல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. விடாது பெய்த மழையால் சென்னையின் பல பகுதிகள் நீரில் மூழ்கின. வீடுகளுக்குள் வெள்ளம் பெருக்கெடுத்தன.
Samayam Tamil tn eb bill


சென்னை மட்டும்மல்லாமல் வட கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின. டெல்டாவில் ஒரே நாளில் 30 செ.மீ அளவுக்கு மழை பெய்து பயிர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்த நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையை நோக்கி வரும் புதிய புயல் சின்னம்?
சென்னையில் பல பகுதிகள் நீரில் மூழ்கின. வீடுகளுக்குள் வெள்ள நீர் சென்றுள்ளது. சுரங்கப் பாதைகள் முழுவதும் நீர் தேங்கி சென்னையில் போக்குவரத்து பல இடங்களில் ஸ்தம்பித்துள்ளன. கனமழை காரணமாக பல இடங்களில் மின் விநியோகம் தடைபட்டுள்ளது.

இந்நிலையில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த 15 நாள்கள் அவகாசம் வழங்கப்படுவதாக அறிவித்துள்ளார். 28000 இணைப்புகளுக்கு மட்டும் தற்போது மின் இணைப்பு வழங்கப்பட்டவில்லை என்றும், சீரமைப்பு பணிகள் இரவு, பகலாக தொடர்ந்து வரும் நிலையில் மாலைக்குள் அனைத்துப் பகுதிக்கும் மின் இணைப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
கொஞ்சம் ஓவராத்தான் போய்க்கிட்டிருக்கு.. சென்னையில் 77% எக்ஸ்ட்ரா மழை!
டெல்டா மாவட்டங்களில் அதி கனமழை பெய்தாலும் மின் விநியோகம் தடைபடவில்லை என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி