ஆப்நகரம்

பொது முடக்கத்தை நீட்டிக்கலாமா? கலெக்டர்களுடன் ஆலோசித்த முதல்வர்!

மே 31ஆம் தேதியுடன் நான்காம் கட்ட பொதுமுடக்கம் நிறைவடையவுள்ள நிலையில் முதல்வர், மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

Samayam Tamil 29 May 2020, 1:34 pm
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பொது முடக்கம் அமலில் உள்ளது. நிலைமையை உணர்ந்து பொது முடக்கம் ஒவ்வொரு முறையும் நீட்டிக்கப்படுவதற்கு முன்னரும் மருத்துவர்கள், மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகளின் ஆலோசனைகளை முதல்வர் கேட்டறிந்து வருகிறார்.
Samayam Tamil edappadi palanisamy


இந்நிலையில் மாவட்ட ஆட்சியர்களிடம் இன்று கானொலி காட்சி மூலம் முதல்வர் ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களால் கொரோனா வைரஸ் பரவியது. இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. சென்னை குறுகலான தெருக்கள் உள்ள நெரிசல் நிறைந்த பகுதி என்பதால் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக கொரோனா வைரஸ் கட்டுக்குள் உள்ளது. வல்லரசு நாடுகளை விட தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாகவுள்ளது. குணமடைவோர் எண்ணிக்கையும் 50 சதவிகிதமாக இருக்கிறது. கொரோனாவைப் பற்றி மக்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லை. ஆனால், பாதுகாப்புடனும், கட்டுப்பாட்டுடனும் இருக்க வேண்டும். அரசின் வழிமுறைகளை பின்பற்றினால் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும்” என்றார்.

ஹேப்பி நியூஸ் மக்களே, வெட்டுக்கிளிகள் தாக்குதல் தமிழகத்தில் இல்லை!

மேலும் அவர், “மருத்துவர்களின் கடும் முயற்சியின் காரணமாக கொரோனாவால் குணமடைவோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. கொரோனா அறிகுறி தென்பட்டால் உடனே மருத்துவமனையை அணுக வேண்டும். நோய் முற்றிய பிறகு மருத்துவமனைக்கு வந்தால் சிகிச்சை பலனளிக்காமல் போய்விடும்” என்று கூறினார். அதே சமயம் கொரோனா தொற்று 80 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு அறிகுறிகள் இல்லாமலே ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் சமீபத்தில் தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

170 ரயில்கள் மூலம் 2.41 லட்சம் வட மாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் முதல்வர் தனது பேச்சில் குறிப்பிட்டார்.

அடுத்த செய்தி