ஆப்நகரம்

எனக்கு கொழுந்தியாள் இல்லை: வம்புக்கிழுத்த நெட்டிசன்ஸ் - வெளுத்து வாங்கிய பிடிஆர்!

நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தன் மீது வந்த வதந்திகள் குறித்து காட்டமான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

Samayam Tamil 20 Sep 2021, 12:27 pm
45ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொள்ளாத நிலையில் அது குறித்து அவர் விளக்கம் அளித்தார்.
Samayam Tamil PTR PALANIVEL THIAGARAJAN


இது தொடர்பாக அவர், “எனக்கு கடைசி நேரத்தில்தான் அழைப்பு வந்தது, அதோடு எதை பற்றி கூட்டத்தில் விவாதிக்க போகிறோம் என்பது குறித்த விவரங்களும் கடைசி நேரத்தில்தான் தெரிவிக்கப்பட்டது. இதுவரை ஆன்லைன் வழியாக கூட்டம் நடந்த நிலையில் திடீரென நேரடியாக லக்னோ வர சொல்லி அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை” என்று விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில் பிடிஆர் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொள்ளாதது குறித்து சில மர்ம நபர்கள் இணையத்தில் அவதூறு பரப்பி வருகின்றனர். தொலைக்காட்சிகளில் பிரேக்கிங் நியூஸ் வருவதுபோல் எடிட் செய்து தங்கள் வன்மத்தை காட்டியுள்ளனர்.
1 முதல் 8 வரை பள்ளிகள் திறப்பு: முதல்வர் எடுக்கும் முக்கிய முடிவு!
“கொழுந்தியாள் மகளின் பூப்புனித நீராட்டு விழாவிற்கு கலந்து கொள்வதற்காக இவர் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை புறக்கணித்தார் ” என்றும் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு கலந்துகொள்வதற்காக சென்றுள்ளார் என்றும் போட்டோஷாப் செய்யப்பட்டு பரப்பப்பட்டுள்ளன.

மற்றொரு ஐடியில் “மதுரையிலிருந்து டெல்லி செல்ல வேண்டும் என்றால் மூன்று விமானம் மாறி செல்ல வேண்டும். இதை விரும்பாத நிலையில் முதல்வரிடம் அவர் ஸ்பெஷல் விமானம் கேட்டார். ஸ்பெஷல் விமானம் கிடைக்காமல் ஈகோ காரணத்தால் பிடிஆர் இந்த கூட்டத்தை புறக்கணித்தார் ” என்று பதிவிடப்பட்டுள்ளது.
சசிகலாவை ரகசியமாக சந்தித்த அதிமுக முக்கிய புள்ளிகள் யார் யார்?
இதைக் கவனித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடும் எதிர்வினை ஆற்றியுள்ளார். “இது வடிகட்டிய முட்டாள்தனம். கூட்டம் நடந்தது டெல்லியில் இல்லை லக்னோவில். எனக்கு கொழுந்தியாள் இல்லை, எப்படி இல்லாதவர் மகளுக்கு விழா நடக்கும் பொய் சொல்வதற்கு கூட ஒரு குறைந்தபட்ச அறிவு வேண்டுமடா மாட்டு மூத்திரம் குடித்தே மூளை கெட்டுப் போனவர்களா” என பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி