ஆப்நகரம்

21 லட்சம் ரூபாய் எங்கே? பண மோசடி புகாரில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி

நடிகரும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் 21 லட்சம் ரூபாயைப் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக பிரம்மானந்தம் சுப்பிரமணியன் என்பவர் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

Samayam Tamil 1 Oct 2019, 3:58 pm
நடிகர் விஜய்யின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்குநராக அறியப்பட்டாலும் அவ்வப்போது படங்களில் நடிக்கவும் செய்கிறார். விஜய்யை திரையுலகில் அறிமுகப்படுத்திய இவர் கடந்த ஆண்டு டிராஃபிக் ராமசாமி படத்தில் நடித்தார். விக்கி இயக்கிய இந்தப் படத்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரிக்கவும் செய்தார்.
Samayam Tamil 21 லட்சம் ரூபாய் எங்கே பண மோசடி புகாரில் விஜய்யின் தந்தை எஸ்ஏசி


சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக உருவாகியிருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் வரவேற்பு பெறவில்லை.

இந்தப் படத்தின் தமிழ்நாட்டு ஒளிபரப்பு உரிமத்தை 3 கோடி ரூபாய்க்கு தருவதாக கூறி, அமெரிக்க குடியுரிமை பெற்ற தமிழகத்தை சேர்ந்த பிரம்மானந்தம் சுப்பிரமணியன் என்பவரிடம் முன்பணமாக 21 லட்சம் ரூபாய் பணத்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பெற்றுக்கொண்டு ஒப்பந்தம் போட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் சில நாட்கள் கழித்து இந்த படத்தை எஸ்.ஏ.சந்திரசேகரே வெளியிடுவதாகவும், அதனால் பிரம்மானந்தம் சுப்பிரமணியத்திடம் பெற்ற பணத்தைத் திருப்பித் தருவதாகக் கூறியும் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளார்.

இதனையடுத்து சில நாட்கள் கழித்து கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்ட பிரம்மானந்தம் சுப்பிரமணியனிடம் சந்திரசேகர் பணத்தை திருப்பித் தராமல் தொடர்ந்து ஏமாற்றி வருவதாகவும், பணத்தை திருப்பி கேட்டால் கொலை மிரட்டல் விடுவதாகவும் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அவரின் சார்பில் தயாரிப்பாளர் மணிமாறன் என்பவர் புகார் அளித்துள்ளார்.

அடுத்த செய்தி