ஆப்நகரம்

ஸ்டெர்லைட் விவகாரத்தில் அச்சப்பட வேண்டியது அரசாங்கமல்லவோ; வைரமுத்து அதிரடி!

ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக கவிஞர் வைரமுத்து டுவிட் செய்துள்ளார்.

Samayam Tamil 22 May 2018, 4:32 pm
சென்னை: ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக கவிஞர் வைரமுத்து டுவிட் செய்துள்ளார்.
Samayam Tamil Vairamuthu


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நடைபெற்று வரும் போராட்டம், இன்று 100வது நாளை எட்டியது. இந்நிலையில் 144 தடை உத்தரவை மீறி, போராட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.

அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தும் போது, மோதல் ஏற்பட்டது. இதையடுத்து கண்ணீர் புகை குண்டு, தடியடி, துப்பாக்கிச்சூடு உள்ளிட்டவை நடைபெற்றன. இந்தக் கலவரங்களால் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிகழ்வு குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கிடையில் தூத்துக்குடி பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள கவிஞர் வைரமுத்து, பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்கிறது காவல்துறை. ஆனால் அச்சப்பட வேண்டியது அரசாங்கமல்லவோ? தீயை நிறுத்துங்கள்; தீர்வு காணுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Find solution for sterlite says Vairamuthu.

அடுத்த செய்தி