ஆப்நகரம்

பெண் எழுத்தாளரை குறித்து வாட்ஸ் ஆப்பில் தவறான பதிவு: பின்னர் என்ன நடந்தது!!

சென்னையச் சேர்ந்த பெண் எழுத்தாளரை குறிவைத்து பேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதளங்களில் தரக்குறைவான விமர்சனங்களை பதிவு செய்தவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 25 Sep 2019, 3:18 pm
''பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகவும், அந்தக் குற்றத்திற்காக தன்னை காவல்துறை கைது இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பதிவு செய்து வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று பெண் எழுத்தாளர் சுந்தரவள்ளி சென்னை சைபர் க்ரைமில் புகார் அளித்துள்ளார்.
Samayam Tamil Cyber Crime


சென்னையைச் சேர்ந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் அமைப்பின் துணை செயலாளராக சுந்தரவள்ளி இருக்கிறார். தன் மீது தவறான தகவல்களை பரப்புவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுந்தரவள்ளி கேட்டுக் கொண்டுள்ளார்.

அவர் அளித்திருக்கும் புகாரில், தன்னை பேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப் மூலம் விமர்சிக்கும் நபர்களின் பெயர்களை குறித்துள்ளார். இதையடுத்து, அபிமன்யு என்பவர் மீது காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.

ஆனாலும் இதுல திமுகவை அதிமுகவால் மிஞ்ச முடியலை...!!

இவர் மீது பெண்கள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம், பெண்களை பின் தொடருதல், மதிப்பை குறைக்கும் வகையில் மோசடி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திமுகவின் தேர்தல் நிதி செய்தி இட்டுக்கட்டப்பட்டது; சிபிஎம் ஆவேசம்!!

கடந்தாண்டு பொது நிகழ்ச்சியில் பேசும்போது, இரண்டு பிரிவினருக்கு இடையே பிரச்சனையை ஏற்படுத்துவது போல பேசி இருந்ததாக சுந்தரவள்ளி மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி