ஆப்நகரம்

கும்மிடிப்பூண்டி: ஊரடங்கு நேரத்தில் இயங்கிய எண்ணெய் ஆலையில் தீ விபத்து

கும்மிடிப்பூண்டி அருகே எண்ணெய்த் தொழிற்சாலை ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டது.

Samayam Tamil 27 Mar 2020, 8:07 pm
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட் டையில் உள்ள சிறுபுழல்பேட்டை ஊராட்சியில் செயல்பட்டு வந்த கசடு எண்ணெய்த் தொழிற்சாலையில் தீ விபத்து நேரிட்டது.
Samayam Tamil fire in gummidipoondi.


ஊரடங்கு நிலையிலும் இந்த தொழிற்சாலை இயங்கி வந்த நிலையில் தொழிற்சாலை வளாகத்தில் மின் கசிவு காரணமாக ஒரு பகுதியில் தீப்பிடித்துள்ளது.

இதன் காரணமாக தீப்பற்றி ஒவ்வொரு கசடு எண்ணைய் பேரல்கள் வெடித்தன. இதனால் தீ பரவி தீப்பிழம்பும் புகையும் 10 கி.மீ தூரம் வரை பரவியது.


சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் கும்மிடிப்பூண்டி சிப்காட் மற்றும் கும்மிடிப்பூண்டி தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கசடு எண்ணை தொழிற்சாலையில் பற்றிய தீயை அணைத்தனர்.

அடுத்த செய்தி