ஆப்நகரம்

குரோம்பேட்டையில் மர்மான முறையில் தீ விபத்து : 70 சதவீதம் காயத்துடன் பெண் மருத்துவமனையில் அனுமதி!

தாம்பரம் அடுத்த குரோம்பேட்டையில் மர்மான முறையில் தீ பற்றியதால் பெண் ஒருவர் 70 சதவிகிதம் தீக்காங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து குரோம்பேட்டை போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Samayam Tamil 7 Jan 2019, 6:25 pm
தாம்பரம் அடுத்த குரோம்பேட்டையில் மர்மான முறையில் தீ பற்றியதால் பெண் ஒருவர் 70 சதவிகிதம் தீக்காங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து குரோம்பேட்டை போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Samayam Tamil Fire Accident


தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை மீனாட்சியம்மன் நகர் அம்பேத்கார் தெருவை சேர்ந்தவர் பூபதி வயது 58. இவருக்கு திருமணமாகி மூன்று பெண்கள் குழைந்தைகள் உள்ள நிலையில் இவரின் கணவர் இறந்து போனதால் தனது மூன்றாவது மகள் மற்றும் மருமகனுடன் வசித்து வந்துள்ளார்.

இன்று காலை எல்லோரும் வெளியே சென்றதால் வழக்கம் போல் காலை உணவு சாப்பிட்டு விட்டு தூங்கி கொண்டிருக்கும் போது மர்மமான முறையில் தீப்பற்றி கொண்டதில் அலறி துடித்தபடி வீட்டிற்க்கு வெளியே ஓடி வந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்து 70 சதவிகிதம் தீகாயங்களுடன் அரசு ஆம்புலனஸ் மூலம் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து குரோம்பேட்டை காவல் நிலையத்திற்க்கு தகவல் தெரிவிக்கபட்டது. சம்பவ இடத்திற்க்கு வந்த காவல் துறையினர் முன்விரோதம் காரணமாக தீ வைககப்பட்டாரா அல்லது தற்கொலை முயற்சியா என்று பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி