ஆப்நகரம்

நாகை: அடுத்தடுத்து கடைகள் தீவிபத்து! ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்!

நாகையில் அடுத்தடுத்த கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 கடைகள் எரிந்து நாசமாகியது. இதில் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகின.

Samayam Tamil 12 Jan 2019, 11:06 pm
நாகையில் அடுத்தடுத்த கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 கடைகள் எரிந்து நாசமாகியது. இதில் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகின.
Samayam Tamil nagai fire


நாகை மாவட்டம் செம்பனார்கோவில் அருகில் உள்ள வடகரையில் கவரிங் கடை நடத்தி வருபவர் தியாகராஜன். இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார். பின்னர், மறுநாள் அதிகாலை 4 மணியளவில் அந்த கடையில் இருந்து புகை வந்தது. தொடர்ந்து நகைக்கடைக்கு அருகில் இருந்த மற்ற பானிபூரி கடை, டீக்கடை, காய்கறி கடைகளிலும் தீ பரவியது. .

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மயிலாடுதுறை தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுப்படுத்த முயற்சித்தனர். ஆனால், 4 கடைகளிலும் தீ பரவி முற்றிலுமாக நாசமாகியது. இந்த விபத்தில் கடைகளில் இருந்து 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகின. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்து இதுவரை தெரியவில்லை. தீ விபத்து சம்பவம் தொடர்பாக பொறையாறு போலீசார், அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.

அடுத்த செய்தி