ஆப்நகரம்

பாபநாசத்தில் தீவிபத்தினால் பாதிக்கப்பட்ட கடை வியாபரிகளுக்கு வேளாண் அமைச்சர் நிவாரணம்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே தீயினால் பாதிக்கப்பட்டு கடைகளை இழந்த வியாபாரிகளுக்கு தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு நிவாரணம் வழங்கி, ஆறுதல் கூறினார்.

Samayam Tamil 31 Jan 2019, 10:18 pm
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே தீயினால் பாதிக்கப்பட்டு கடைகளை இழந்த வியாபாரிகளுக்கு தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு நிவாரணம் வழங்கி, ஆறுதல் கூறினார்.
Samayam Tamil Fire


தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே இராஜகிரியில் நேற்றைய தினம் தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் மூன்று கடைகள் முற்றிலும் எரிந்து நாசமாகின. இதனால் கடையை இழந்த வியாபாரிகள் என்ன செய்வது என தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு தீயினால் கடைகளை இழந்து தவித்த வியாபாரிகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட மூன்று நபர்களுக்கும் நபர் ஒருவருக்கு 10,000 ரூபாய் வீதம் 30 ஆயிரம் ரூபாயை தனது சொந்த நிதியிலிருந்து கொடுத்து உதவினார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம்குமார், பாபநாசம் வட்டாச்சியர் மாணிக்கராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் வைத்தியநாதன், பாபநாசம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராமஊராட்சி) அறிவானந்தம், பாபநாசம் வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார், கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ், முன்னாள் கூட்டுறவு சங்க மாவட்ட தலைவர் மோகன், முன்னாள் பாபநாசம் ஒன்றிய தலைவர் கோபிநாதன், ராஜகிரி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஷேக் தாவூத், இராஜகிரி ஊராட்சி ஒன்றிய செயலர் கலைச்செல்வன் ஆகியோரும் பாதிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆறுதல் கூறினர்.

அடுத்த செய்தி