ஆப்நகரம்

தீ விபத்தில் குடிசைகள் எரிந்து நாசம்; ஒருவர் பலி

தஞ்சை அருகே நிகழந்த தீ விபத்தில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும், குடிசை வீடுகள் தீயில் எரிந்து சாம்பலாகின.

TNN 13 Jul 2016, 11:04 pm
தஞ்சாவூர்: தஞ்சை அருகே நிகழந்த தீ விபத்தில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும், குடிசை வீடுகள் தீயில் எரிந்து சாம்பலாகின.
Samayam Tamil fire accident near thanjavur huts burnt 1 dead
தீ விபத்தில் குடிசைகள் எரிந்து நாசம்; ஒருவர் பலி


தஞ்சை மாவட்டம் கண்டியூர் அருகே திருக்காட்டுப்பள்ளியில் உள்ள ஒரு குடிசை வீட்டில் திடீரென தீ பற்றி விபத்து ஏற்பட்டது. இந்த தீ அடுத்தடுத்த குடிசை வீடுகளுக்கு பரவியதால், அப்பகுதியில் இருந்த குடிசை வீடுகள் பல தீயில் எரிந்து நாசமாகின.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயனைப்பு துறையினர், பல மணிநேர போராட்டத்துக்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த செய்தி