ஆப்நகரம்

சிறுதாவூா் பங்களாவில் தீ விபத்து: சவுக்கு மரங்கள் எரிந்து சேதம்

முன்னாள் முதல்வா் ஜெயலலிததாவிற்கு சொந்தமான சிறுதாவூா் பங்களாவில் ஏற்பட்ட தீ விபத்தில் சவுக்கு மரங்கள் எரிந்து சேதமாகின.

Samayam Tamil 29 Jun 2018, 11:24 am
முன்னாள் முதல்வா் ஜெயலலிததாவிற்கு சொந்தமான சிறுதாவூா் பங்களாவில் ஏற்பட்ட தீ விபத்தில் சவுக்கு மரங்கள் எரிந்து சேதமாகின.
Samayam Tamil images.


முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவிற்கு சொந்தமான பங்களா திருப்போரூரை அடுத்த சிறுதாவூரில் அமைந்துள்ளது. ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னா் அங்கு காவல் துறையினா், தனியாா் பாதுகாவலா்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் பங்களாவை சுற்றிலும் சுமாா் 200 ஏக்கா் பரப்பளவில் சவுக்கு மரங்கள், புற்கள் வளா்ந்துள்ளன.

இந்நிலையில் நேற்று மாலை பங்களாவை சுற்றி உள்ள சவுக்கு மரங்கள், புள் வெளிகளில் தீ பிடித்து எரியத் தொடங்கியது. தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினா் 10 வாகனங்களில் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். நெருப்பின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அதை கட்டுப்படுத்த சிரமம் ஏற்பட்டது. தொடா்ந்து 6 மணிநேரப் போராட்டத்திற்கு பின்னா் தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்தனா்.

தீ பிடித்த இடத்திற்கும் பங்களாவிற்கும் சுமாா் 500 மீ. இடைவெளி இருந்ததால் பங்களாவிற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்று தொிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் சவுக்கு மரங்கள் எரிந்து சேதமடைந்தன.

அடுத்த செய்தி