ஆப்நகரம்

பாளையங்கோட்டை தனியார் பள்ளியில் தீவிபத்து; மாணவர்கள் உடனடியாக வெளியேற்றம்!

தனியார் பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் இருந்து, மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

Samayam Tamil 18 Jul 2018, 6:50 pm
மதுரை: தனியார் பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் இருந்து, மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
Samayam Tamil Fire


திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் 3 மாடிகள் கொண்ட ரோஸ் மேரி பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று பிற்பகல் 12.15 மணியளவில், இரண்டாவது மாடியின் ஸ்மார்ட் வகுப்பறையில் இருந்து கரும் புகை வெளியேறியது. இதைக் கண்ட ஆசிரியர்கள் உடனடியாக மாணவர்களை பள்ளி கட்டடத்தில் இருந்து வெளியேற்றினர்.

பின்னர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அதிகாரி யு.ரமேஷ் கூறுகையில், பிற்பகல் 12.30 மணியளவில் தீ குறித்து தகவல் கிடைத்தது. உடனே 2 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மாணவர்கள் உடனே வெளியேற்றப்பட்டு, தீயை அணைக்க அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. குறைந்த நேரத்தில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஸ்மார்ட் வகுப்பறையில் மின் கசிவு ஏற்பட்டதன் காரணமாக தீப்பிடித்திருப்பதாக கூறினார்.

அந்த தளத்தில் தீ அணைக்கும் கருவிகள் இருந்தும் பயன்படுத்தப்படவில்லை என்று குறிப்பிட்டார். மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதிஷ், காவல்துறை துணை இயக்குநர் சுகுணா சிங், பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விரைந்து ஆய்வு செய்தனர்.

பின்னர் பேசிய ஆட்சியர், பள்ளி மீது ஏதேனும் தவறுகள் இருந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Fire breaks out in Palayamkottai school.

அடுத்த செய்தி