ஆப்நகரம்

ஜவுளி ஆலையில் தீ; 6 பேர் பலி

வங்காளதேசத்தில் ஜவுளி ஆலை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 6 பேர் உடல் கருகி பலியாயினர்.

TNN 20 Sep 2017, 8:44 pm
வங்காளதேசத்தில் ஜவுளி ஆலை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 6 பேர் உடல் கருகி பலியாயினர்.
Samayam Tamil fire in bangladesh textile factory kills six
ஜவுளி ஆலையில் தீ; 6 பேர் பலி


வங்காள தேசத்தின் முன்ஷிகஞ்ச் மாவட்டத்தில் பிரபல ஜவுளி தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது.

இன்று இந்த ஜவுளி ஆலையின் முதல் மாடியில் திடீரென்று தீ பிடித்தது. ஆரம்பத்தில் முதல் மாடியில் மட்டுமே தீ எரிந்து கொண்டிருந்த நிலையில், சற்று நேரத்தில் மளமளவென பரவியது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர், தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர்.

ஆனால், இந்த தீவிபத்தில் அங்கிருந்த 6 பேர் உடல் கருகி பலியானதாகவும், அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த மேலும் சிலரைக் காணவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து ஜவுளி ஆலையின் மேலாளர் உட்பட 4 பேரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி