ஆப்நகரம்

அரசுப் பேருந்தில் தீ: சாமர்த்தியத்தால் பயணிகள் உயிர் பிழைப்பு

அரசுப் பேருந்தில் திடீரென தீ பிடித்ததால் நெல்லையில் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் ஓட்டுனர் மற்றும் நடத்துனரின் சாமர்த்தியத்தால் பயணிகள் அனைவரும் பத்திரமாக உயிர் பிழைத்தனர்.

TNN 22 Jul 2016, 6:27 pm
நெல்லை: அரசுப் பேருந்தில் திடீரென தீ பிடித்ததால் நெல்லையில் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் ஓட்டுனர் மற்றும் நடத்துனரின் சாமர்த்தியத்தால் பயணிகள் அனைவரும் பத்திரமாக உயிர் பிழைத்தனர்.
Samayam Tamil fire in govt bus at nellai peoples are safe
அரசுப் பேருந்தில் தீ: சாமர்த்தியத்தால் பயணிகள் உயிர் பிழைப்பு


நெல்லை மாவட்டம் சீவலப்பேரியில் இருந்து சுமார் 70 பயணிகளை ஏற்றிக் கொண்டு, அரசு பேருந்து ஒன்று நெல்லை பேருந்து நிலையத்துக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது பேருந்தில் திடீரென தீ பிடித்ததால் அங்கு பரபரபப்பு ஏற்பட்டது.

எனினும், பேருந்தை உடனடியாக ஓரமாக நிறுத்திய ஓட்டுனர் மற்றும் நடத்துனர் ஆகியோர் சாமர்த்தியமாக செயல்பட்டு, பயணிகளை வெளியேறுமாறு அறிவுறுத்தினர். தொடர்ந்து, பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறினர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர், பேருந்து முழுவதும் பற்றி எறிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இச் சம்பவம் குறித்து ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி