ஆப்நகரம்

ஒருபுறம் பற்றி எரியும் கதிராமங்கலம்: மறுபுறம் ஜி.எஸ்.டியை கொண்டாடும் இந்தியா!

ஒருபுறம் கதிராமங்கலத்தில் தி பற்றி எரிந்து வரும் நிலையில், நாடே இங்கு ஜிஎஸ்டியை கொண்டாடி வருகிறது.

TNN 1 Jul 2017, 5:25 pm
ஒருபுறம் கதிராமங்கலத்தில் தி பற்றி எரிந்து வரும் நிலையில், நாடே இங்கு ஜிஎஸ்டியை கொண்டாடி வருகிறது.
Samayam Tamil fire in kathiramangalam whole india celebrate gst
ஒருபுறம் பற்றி எரியும் கதிராமங்கலம்: மறுபுறம் ஜி.எஸ்.டியை கொண்டாடும் இந்தியா!


தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கும், அதிகாரிகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அப்பகுதியில், எண்ணெய் கொண்டு செல்லும் குழாயில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளுக்கும், போராட்டம் நடத்தி வந்த மக்களுக்கும் இடையில், வாக்குவாதத்துடன் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.



மேலும், பலர் கைது செய்யப்பட்டனர். இப்படியிருக்கும் போது, ஒரே நாடு, ஒரே வரி, ஒரே தேசம் என்ற தாரக மந்திரத்துடன் சரக்கு மற்றும் சேவை வரி இன்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கான அறிமுக விழா நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, பாஜக கூட்டணி கட்சி எம்பி-க்கள், அமைச்சர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இது ஒருபக்கம் இருக்கும் போது, ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு முன்பு தள்ளுபடி விலையில் பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் கூட்டமாக சென்றதால் தீபாவளி போல் காணப்பட்டது.

அடுத்த செய்தி