நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அருகே முதல் முறையாக ஏ.சி. பஸ் ஸ்டாப் திறக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் அபிஷேகப்பட்டியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பல்கலைக்கழகத்திற்கு அருகில் நகரின் முக்கிய இடங்களுக்குச் செல்லும் பேருந்துகள் நிற்கும் இடத்தில் ஏசி பஸ் ஸ்டாப் திறக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவை உறுப்பினர் விஜிலா சத்தியானந்த் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் இந்த பஸ் ஸ்டாப் கட்டப்பட்டுள்ளது. இதுவே தமிழ்நாட்டின் முதல் ஏ.சி. பஸ் ஸ்டாப் எனக் கூறப்படுகிறது.
இதனை அமைச்சர் கடம்பூர் ராஜூ, அமைச்சர் ராஜலெட்சுமி ஆகியோர் இன்று திறந்துவைத்தனர். பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையமும் திறக்கப்பட்டது.
பல்கலைக்கழகத்திலிருந்து நெல்லை புதிய பேருந்து நிலையம் வரை செல்ல புதிய வழித்தடத்தையும் அமைச்சர்கள் தொடங்கிவைத்துள்ளனர். இந்நிகழ்வுகளின்போது பல்கலைக்கழக துணைவேந்தர் கே. பாஸ்கர், எம்.பி. விஜிலா சந்தியானந்த் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இந்த ஏ.சி. பஸ் ஸ்டாப் 15 இருக்கைகளை மட்டுமே கொண்டிருக்கிறது. பல்கலைக்கழக வேலை நேரம் முடியும்போது ஏராளமானவர்கள் அந்த பேருந்து நிறுத்தத்திற்கு வருவார்கள் என்பதால் இந்த பஸ் ஸ்டாப் போதாது என அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள். ஏ.சி. வசதியுடன் பயணிகள் நிழற்குடை அமைப்பது தேவையில்லாதது எனவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தராக கே. பிச்சுமணி நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தற்போதைய துணைவேந்தர் பாஸ்கர் ஓய்வு பெறுவதை முன்னிட்டு அவசர அவசரமாக இந்த ஏ.சி. பஸ் ஸ்டாப் கட்டப்பட்டது எனவும் கூறப்படுகிறது.
மாநிலங்களவை உறுப்பினர் விஜிலா சத்தியானந்த் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் இந்த பஸ் ஸ்டாப் கட்டப்பட்டுள்ளது. இதுவே தமிழ்நாட்டின் முதல் ஏ.சி. பஸ் ஸ்டாப் எனக் கூறப்படுகிறது.
இதனை அமைச்சர் கடம்பூர் ராஜூ, அமைச்சர் ராஜலெட்சுமி ஆகியோர் இன்று திறந்துவைத்தனர். பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையமும் திறக்கப்பட்டது.
இந்த ஏ.சி. பஸ் ஸ்டாப் 15 இருக்கைகளை மட்டுமே கொண்டிருக்கிறது. பல்கலைக்கழக வேலை நேரம் முடியும்போது ஏராளமானவர்கள் அந்த பேருந்து நிறுத்தத்திற்கு வருவார்கள் என்பதால் இந்த பஸ் ஸ்டாப் போதாது என அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள். ஏ.சி. வசதியுடன் பயணிகள் நிழற்குடை அமைப்பது தேவையில்லாதது எனவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தராக கே. பிச்சுமணி நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தற்போதைய துணைவேந்தர் பாஸ்கர் ஓய்வு பெறுவதை முன்னிட்டு அவசர அவசரமாக இந்த ஏ.சி. பஸ் ஸ்டாப் கட்டப்பட்டது எனவும் கூறப்படுகிறது.