ஆப்நகரம்

234 சட்டமன்ற தொகுதிகளையும் கடகடவென சொல்லி சாதித்த முதல் வகுப்பு மாணவி - குவியும் பாராட்டு!

தமிழக சட்டமன்ற தொகுதிகளின் பெயர்கள் அனைத்தையும் கூறி, முதல் வகுப்பு மாணவி சாதனை படைத்துள்ளார்.

Samayam Tamil 23 Apr 2019, 4:34 pm
கரூர் மாவட்டம் பரமத்தி அருகே கார்வழி ஊராட்சி அமைந்துள்ளது. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதல் வகுப்பு படித்து வரும் மாணவி ராஜதர்ஷினி. இவர் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளையும் கடகடவென சொல்லி முடிக்கும் திறன் பெற்றவர்.

இதையொட்டி நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர், பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் சிறுமி ராஜதர்ஷினி தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளையும் இடைவிடாமல் சொல்லி அசத்தினார். இது காண்போர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

பல்வேறு தரப்பினரும் சிறுமியை பாராட்டி மகிழ்ந்தனர். இந்நிலையில் சிறுமி ராஜதர்ஷினிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொன்னாடை போர்த்தி பரிசும், மரக்கன்றும் வழங்கி கௌரவித்தார்.

அடுத்த செய்தி