ஆப்நகரம்

சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்; 2020ல் முதல் முறை - உச்சத்தை தொட்டாச்சு!

சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்; 2020ல் முதல் முறை - உச்சத்தை தொட்ட வீராணம் ஏரி!

Samayam Tamil 24 Jan 2020, 11:08 am
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே வீராணம் ஏரி அமைந்துள்ளது. கி.பி. 1000களில் வாழ்ந்த சோழர்கள் காலத்தில் இந்த ஏரி வெட்டப்பட்டது. 14 கிலோமீட்டர் நீளத்துடன் மனிதனால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய ஏரியாக உள்ளது.
Samayam Tamil Veeranam Lake


இது சென்னையில் இருந்து 235 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதன் முழு கொள்ளளவு 47.5 அடி ஆகும். இந்த ஏரி சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக திகழ்கிறது. கடந்த ஆண்டு தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கியது.

திமுகவை விமர்சிக்க பெரியாரை காட்டி பூச்சாண்டி வேலை வேண்டாம் - முரசொலி!

தொடர் மழையால் பல்வேறு நீர் நிலைகள் நிரம்பி பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டன. இதேபோல் வடகிழக்கு பருவமழையும் தமிழகத்திற்கு நல்ல மழையை அளித்துள்ளது. கடந்த ஆண்டு கடலூர் மாவட்டத்தில் நூறு சதவீத மழை பெய்துள்ளது.

இதனால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து ஒரே ஆண்டில் 9 முறை வீராணம் ஏரி முழுக் கொள்ளளவை எட்டியது. இதன்மூலம் சென்னையின் குடிநீர் தேவை, விவசாயிகளின் பாசன தேவை பூர்த்தி செய்யப்பட்டது.

சென்னை கூவம் ஆற்றில் படகு சவாரி போக ரெடியா?- அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்!

இந்த சூழலில் நடப்பாண்டில் முதல்முறையாக வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்த சூழலில் கீழணையில் இருந்து வினாடிக்கு 582 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

இதையொட்டி சேத்தியாதோப்பு அணைக்கட்டுக்கு 412 கன அடி நீர் அனுப்பப்பட்டு வருகிறது. விவசாயத்திற்காக 96 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு கோடைகாலத்தில் சென்னையின் குடிநீர் தேவை எந்தவித பிரச்சனையும் இன்றி முழுவதுமாக தீர்க்கப்படும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

வசமா மாட்டப் போகிறாரா ஹெச்.ராஜா?- ஸ்கெட்ச் போட்ட உயர் நீதிமன்றம்!

அடுத்த செய்தி