தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு நீடித்து வருகிறது. இந்த சூழலில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான புதிய பாதிப்புகள் 1,400க்கும் கீழ் பதிவாகியுள்ளன. இது 184 நாட்களுக்கு பிறகான குறைந்தபட்ச எண்ணிக்கை ஆகும். நேற்று புதிதாக 1,391 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 7,87,554ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் தொடர்ந்து அதிகபட்ச பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. இங்கு தொடர்ந்து 7வது நாளாக 400க்கும் குறைவாக புதிய பாதிப்புகள் பதிவாகி கொண்டிருக்கின்றன.
இதையடுத்து செங்கல்பட்டு(85), திருவள்ளூர்(66), காஞ்சிபுரம்(43) ஆகிய மாவட்டங்கள் இருக்கின்றன. சென்னையைத் தொடர்ந்து மேற்கு தமிழகம் இரண்டாவது அதிகபட்ச பாதிப்புகளை பதிவு செய்துள்ளது. சேலத்தில் புதிதாக 75 பேரும், திருப்பூரில் 69 பேரும், ஈரோட்டில் 49 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தென் தமிழக மாவட்டங்களான மதுரையில் 34, திருநெல்வேலியில் 22 பேரும் கோவிட்-19 தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர். புதிதாக 15 பேர் பலியானதன் மூலம் மொத்த உயிரிழப்புகள் 11,762ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா நிலவரம்: மாவட்டம் வாரியாக...
மாநிலத்தின் பலி விகிதம் 1.5 சதவீதமாக உள்ளது. தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 69,903 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்மூலம் மொத்த பரிசோதனைகள் 1.2 கோடியாக அதிகரித்துள்ளது.
குணமாகும் விகிதம் 97 சதவீதமாக இருக்கிறது. தற்போது வரை 7,64,854 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில் கோவிட்-19 பாதிப்பு பட்டியலில் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து 4வது இடத்தில் தமிழகம் இருக்கிறது.
இதையடுத்து செங்கல்பட்டு(85), திருவள்ளூர்(66), காஞ்சிபுரம்(43) ஆகிய மாவட்டங்கள் இருக்கின்றன. சென்னையைத் தொடர்ந்து மேற்கு தமிழகம் இரண்டாவது அதிகபட்ச பாதிப்புகளை பதிவு செய்துள்ளது. சேலத்தில் புதிதாக 75 பேரும், திருப்பூரில் 69 பேரும், ஈரோட்டில் 49 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தென் தமிழக மாவட்டங்களான மதுரையில் 34, திருநெல்வேலியில் 22 பேரும் கோவிட்-19 தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர். புதிதாக 15 பேர் பலியானதன் மூலம் மொத்த உயிரிழப்புகள் 11,762ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா நிலவரம்: மாவட்டம் வாரியாக...
மாநிலத்தின் பலி விகிதம் 1.5 சதவீதமாக உள்ளது. தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 69,903 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்மூலம் மொத்த பரிசோதனைகள் 1.2 கோடியாக அதிகரித்துள்ளது.
குணமாகும் விகிதம் 97 சதவீதமாக இருக்கிறது. தற்போது வரை 7,64,854 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில் கோவிட்-19 பாதிப்பு பட்டியலில் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து 4வது இடத்தில் தமிழகம் இருக்கிறது.