ஆப்நகரம்

தடைக்காலம் எதிரொலி; மீன்களின் விலை இருமடங்காக உயர்வு!

மீன்பிடித் தடைக்காலம் காரணமாக, மீன்களின் விலை அதிகரித்துள்ளது.

Samayam Tamil 10 May 2018, 2:37 am
சென்னை: மீன்பிடித் தடைக்காலம் காரணமாக, மீன்களின் விலை அதிகரித்துள்ளது.
Samayam Tamil Fish
மீன்கள் விலை உயர்வு


மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை, இரு மாதங்கள் மீன்பிடித் தடைக்காலம் அமலில் இருக்கும். அப்போது விசைப்படகு மூலம் ஆழ்கடலுக்குச் சென்று மீன்பிடிக்க மாட்டார்கள்.

ஆனால் சிறிய கட்டுமரங்கள், படகுகள் மூலம் குறிப்பிட்ட தூரம் வரை சென்று மீன்பிடிக்கலாம். நடப்பாண்டின் மீன்பிடித் தடைக்காலம் இரு வாரங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக நாகை, பூம்புகார், திருமுல்லை வாசல் உள்ளிட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இந்நிலையில் மீன்வரத்து குறைவால், அதன் விலை அதிகரித்து உள்ளது.

இதுகுறித்து பேசிய பூம்புகார் மீன் வியாபாரி, தற்போது சிறிய வகை மீன்களே கிடைக்கின்றன. இதனால் பிற பகுதிகளில் இருந்து மீன்களை கொள்முதல் செய்கிறோம். மீன்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது.

கடந்த மாதம் ரூ.100க்கு விற்ற மீன்கள், தற்போது ரூ.200க்கு விற்கப்படுகின்றன. கடலில் இருந்து இறால்கள் குறைந்த அளவே கிடப்பதால், ரூ.50க்கு விற்கப்பட்டவை தற்போது ரூ.200க்கு விற்கப்படுகின்றன எனக் கூறினார்.

Fish rates increased due to fishing ban.

அடுத்த செய்தி