ஆப்நகரம்

எல்லையை தாண்டினால் நடவடிக்கை: மீனவர்களை எச்சரித்த அரசு

ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த பிரிட்ஜோ (22), கடந்த 6ம் தேதி இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

TNN 19 Mar 2017, 12:09 pm
ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த பிரிட்ஜோ (22), கடந்த 6ம் தேதி இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதை கண்டித்து, இலங்கை கடற்படையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதியில், மீனவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். போராட்டத்தைக் கைவிட மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் பேச்சு வார்த்தை நடத்தினர்.
Samayam Tamil fisherman warned by government on account of bridjo murder case
எல்லையை தாண்டினால் நடவடிக்கை: மீனவர்களை எச்சரித்த அரசு


இதனை தொடர்ந்து மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டதாக தகவல் வெளிவந்தது. இந்நிலையில், மீனவர்கள் தொடர்ந்து எல்லை தாண்டி செல்வதால் இது போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது என்று மீன்வளத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: மீனவர்கள் தொடர்ந்து எல்லை தாண்டி மீன்பிடிக்க செல்லக்கூடாது. அரசால் தடை செய்யப்பட்ட வலைகளை கொண்டு மீன்பிடிக்கக்கூடாது. விதிகளை மீறும் படகுகள் மற்றும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

fisherman warned by government on account of bridjo murder case.

அடுத்த செய்தி