ஆப்நகரம்

மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

TNN 6 Oct 2016, 12:26 pm
மதுரை: ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
Samayam Tamil fishermen announced indefinite strike
மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு


ராமேஸ்வரத்தில் விசைப்படகு மீனவர்களின் அவசரக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் இலங்கை கடற்படையினரின் அத்துமீறலை கண்டித்து காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தை இன்று முதலே தொடங்கவும் மீனவர்கள் முடிவெடுத்துள்ளனர். மேலும், சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரை விடுவிக்கக வேண்டும். இலங்கை வசமுள்ள 115 விசைப் படகுகளை விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் வலியுறுத்தி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

அடுத்த செய்தி