புயலால் காணாமல் போன ஆயிரத்திற்கும் மேற்பட்ட கன்னியாகுமரி மீனவா்களை கண்டுபிடித்து தரவேண்டி குழித்துறை ரயில் நிலையத்தில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவா்கள் மேற்கொண்ட ரயில் மறியல் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.
சில தினங்களுக்கு முன் கன்னியாகுமரி மாவட்டத்தை தாக்கிய ஓகி புயலால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். மேலும், ஓகி புயலின்போது கடலுக்குச் சென்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் காணாமல் போனாதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், புயல் பாதித்த இடங்களில் முறையான நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவில்லை என்றும், கடலில் காணாமல் போன ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களைத் தேடும் பணிகளை செயல்படுத்தவில்லை என்றும் மீனவ மக்கள் அரசின் மீது குற்றம் சுமத்தினர்.
இதனையடுத்து, முதல்வர் புயல் பாதித்த இடங்களைப் பார்வையிட வலியுறுத்தியும், கடலில் மாயமான மீனவர்களை கண்டுபிடிக்க கோரியும் சுமார் 5,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கன்னியாகுமரியில் உள்ள குழித்துறை ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அவ்வழியே செல்லும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
சுமார் 12 மணிநேரமாக நடைப்பெற்ற இந்த போராட்டத்தை தற்போது தற்காலிகமாக வாபஸ் வாங்குதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர். முதல்வர் பாதித்த மீனவர்களைச் சந்திப்பார் என்றும், கடலில் காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பங்குத்தந்தை மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அளித்த வாக்குறுதியை ஏற்று தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.
மீனவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றதால், மீண்டும் அந்த ரயில் பாதையில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
சில தினங்களுக்கு முன் கன்னியாகுமரி மாவட்டத்தை தாக்கிய ஓகி புயலால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். மேலும், ஓகி புயலின்போது கடலுக்குச் சென்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் காணாமல் போனாதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், புயல் பாதித்த இடங்களில் முறையான நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவில்லை என்றும், கடலில் காணாமல் போன ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களைத் தேடும் பணிகளை செயல்படுத்தவில்லை என்றும் மீனவ மக்கள் அரசின் மீது குற்றம் சுமத்தினர்.
இதனையடுத்து, முதல்வர் புயல் பாதித்த இடங்களைப் பார்வையிட வலியுறுத்தியும், கடலில் மாயமான மீனவர்களை கண்டுபிடிக்க கோரியும் சுமார் 5,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கன்னியாகுமரியில் உள்ள குழித்துறை ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அவ்வழியே செல்லும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
சுமார் 12 மணிநேரமாக நடைப்பெற்ற இந்த போராட்டத்தை தற்போது தற்காலிகமாக வாபஸ் வாங்குதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர். முதல்வர் பாதித்த மீனவர்களைச் சந்திப்பார் என்றும், கடலில் காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பங்குத்தந்தை மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அளித்த வாக்குறுதியை ஏற்று தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.
மீனவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றதால், மீண்டும் அந்த ரயில் பாதையில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.