ஆப்நகரம்

மீன்பிடி தடைகாலம் முடிவு: தமிழகத்தில் மீன்பிடித் தொழில் உற்சாகமாக தொடக்கம்

மீன்பிடி தடைகாலம் முடிவடைந்த நிலையில், தமிழகத்தில் மீன்பிடித் தொழில் உற்சாகமாக தொடங்கியுள்ளது.

TNN 15 Jun 2017, 9:19 am
மீன்பிடி தடைகாலம் முடிவடைந்த நிலையில், தமிழகத்தில் மீன்பிடித் தொழில் உற்சாகமாக தொடங்கியுள்ளது.
Samayam Tamil fishing ban ends and tamilnadu fishermen started fishing business
மீன்பிடி தடைகாலம் முடிவு: தமிழகத்தில் மீன்பிடித் தொழில் உற்சாகமாக தொடக்கம்


தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்பட 13 கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் என 15 கடலோர மாவட்டங்கள் கிழக்கு கடற்கரை பகுதிகளில் அடங்கும். இந்த பகுதிகளுக்கு ஏப்ரல் 14-ந்தேதி முதல் மீன்பிடி தடைகாலம் அறிவிக்கப்பட்டது.

45 நாட்களாக இருந்த மீன்பிடி தடைகாலம் இந்த ஆண்டு முதல் 61 நாட்களாக மாற்றப்பட்டது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவுடன் 61 நாட்களாக நீடித்த மீன்பிடி தடைகாலம் நீங்கியது. இதனால் ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்வதற்கான ஆயத்த பணிகளில் மீனவர்கள் நேற்று மும்முரமாக ஈடுபட்டனர். தங்கள் வலைகளை தயார் செய்வது உள்ளிட்ட பணியில் அவர்கள் ஈடுபட்டனர். பின்னர் நள்ளிரவில் அவர்கள் மீன்பிடிக்க புறப்பட்டனர்.

இதற்கிடையே, ராமேஸ்வரம் உள்பட தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள மீனவர்கள் நேற்று பகலிலேயே ஆழ்கடலில் மீன்பிடிக்க புறப்பட்டு சென்றனர்.

Tamilnadu fishermen started fishing business.

அடுத்த செய்தி