ஆப்நகரம்

கர்நாடகாவில் பயங்கர விபத்து; தமிழக இளைஞர்கள் 5 பேர் உயிரிழந்த சோகம்!

கார் மீது சரக்கு லாரி மோதிய பயங்கர விபத்தில், 5 தமிழக இளைஞர்கள் பலியாகினர்.

Samayam Tamil 20 Jun 2018, 10:58 am
பெங்களூரு: கார் மீது சரக்கு லாரி மோதிய பயங்கர விபத்தில், 5 தமிழக இளைஞர்கள் பலியாகினர்.
Samayam Tamil Car Accident
கர்நாடக கார் விபத்து


வேலூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்த இளைஞர்கள் கோவாவில் இருந்து தமிழ்நாடு திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா அருகே ஜவஹனள்ளி பகுதியில், அவர்களின் டொயோட்டா கார் இன்று காலை சென்று கொண்டிருந்தது.

அப்போது எதிரே வந்த சரக்கு லாரி நேருக்கு நேர் மோதியது. இந்த சம்பவத்தில் கார் கடுமையாக சேதமடைந்தது. இதில் காரில் பயணித்த சதாம் உசேன்(22), சதாம்(21), முகமது(24), ஷாருக்(20) ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

காயமடைந்த ஆசிப்(21) சித்ரதுர்கா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் ஆபத்தான நிலையில் மூவர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து ஹிரியூர் காவல்துறைக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஹிரியூர் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக இளைஞர்கள் 5 பேர், கர்நாடக விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Five Ambur boys died in Karnataka accident.

அடுத்த செய்தி