ஆப்நகரம்

கடத்தலில் ஈடுபட்ட இளைஞர்கள் குண்டர் சட்டத்தில் கைது: கோவை போலீஸ் அதிரடி..!!

பூ வியாபாரியை கடத்தியது தொடர்பாக ஐந்து இளைஞர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 16 Aug 2018, 1:59 pm
பூ வியாபாரியை கடத்தியது தொடர்பாக ஐந்து இளைஞர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil gondasss
ஆட்கடத்தல் செய்த இளைஞர்கள் குண்டர் சட்டத்தில் கைது


கோயம்புத்தூர் மாவட்டத்தில் லிங்கப்பா செட்டி தெருவை சேர்ந்த பூ வியாபாரி கே. விஷ்ணுராஜ் (38) என்பவரை மர்ம நபர்கள் சிலர் கடத்தி சென்றனர்.

மேலும் விஷ்ணுராஜிடமிருந்த ரூ. 1.62 லட்சம் பணத்தை பறித்துக்கொண்ட கடத்தல்காரர்கள், அவருடைய குடும்பத்தாரிடம் பணம் கேட்டு மிரட்டினர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த கோயம்புத்தூர் நகர காவல் துறை, பாதிக்கப்பட்ட விஷ்ணுராஜை மீட்டு, குற்றச்செயல் செய்த 5 பேரை கைது செய்தனர்.

கடத்தலில் ஈடுபட்ட வி. சந்தோஷ் (22), வி. பிரபு (28), எஸ். தினகரன் (33), ஏ. சதாம் ஹூசைன் (23), எஸ். அரவிந்த் (23) ஆகியோரை போலீசார் கோயம்புத்தூர் மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர்.

கோவை, திருப்பூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த கும்பல் பல கைவரிசை காட்டியுள்ளதாகவும். பல திருட்டு வழக்குகள் இவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய கோயம்புத்தூர் மாவட்ட காவல்துறை ஆணையர் கே. பெரியய்யா, கடத்தல் குற்றவாளிகள் 5 பேர் மீதும் குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி