ஆப்நகரம்

செங்கல்சூளையில் கொத்தடிமை; வேலூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மீட்பு!

கணியம்பாடி செங்கல்சூளையில் கொத்தடிமையாக இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

Samayam Tamil 21 Feb 2019, 10:49 pm
வேலூர் மாவட்டம் கணியம்பாடி பங்களத்தான் கிராமத்தில் சரவணன் என்பவரது செங்கல்சூளை செயல்பட்டு வருகிறது. இதில் பல ஆண்டுகளாக கொத்தடிமைகளாக ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் இருந்து வந்தனர்.
Samayam Tamil Vellore


இதுதொடர்பாக வருவாய் கோட்டாச்சியருக்கு புகார் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அங்கு கொத்தடிமைகளாக இருந்த ராஜேஷ்(24), அவரது மனைவி மீனாட்சி(22), இவர்களின் மூன்று வயது குழந்தை பூபாலன், ராஜேஷின் சகோதரர்கள் கோவிந்தசாமி (19) சரத்குமார்(15) ஆகிய ஐந்து பேரை வருவாய்த்துறையினர் அங்கிருந்து மீட்டனர்.

விசாரணையில் ராஜேஷின் தந்தை ஊசூரை சேர்ந்த வேலு ரூ.70 ஆயிரம் செங்கல் சூளை உரிமையாளர் சரவணனிடம் பெற்றதாகவும், வேலு இறந்த பின்னரும் அவரது குடும்பத்தினர் கொத்தடிமையாக செங்கல்சூளையில் பணியாற்றி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. மீட்கப்பட்ட இவர்களிடம் முறைப்படி அரசின் சலுகைகளை வழங்கி சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

அடுத்த செய்தி