ஆப்நகரம்

corona recovered: கோவையில் நற்செய்தி... 10 மாத குழந்தை உட்பட 5 பேர் குணமாகினர்..!

கோவையில் கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்த ஒரே குடும்பத்தைச் 5 பேர் குணமடைந்து விட்டதாக மாவட்ட ஆட்சியர் ராசாமணி தகவல் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 6 Apr 2020, 7:13 pm
கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 10 மாத குழந்தை உட்பட 5 பேர் குணமடைந்தனர். கோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் அவரது 10 மாத குழந்தை, அவருடைய தாய் மற்றும் பணிப்பெண் உட்பட 5 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
Samayam Tamil 10 மாத குழந்தை உட்பட 5 பேர் குணமாகினர்


மேலும் கோவை மாவட்டத்தில் முதன்முதலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மாணவியும் சிகிச்சை முடிந்து குணமாகி டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். இந்த தகவலை கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார். கொரோனாவிலிருந்து குணமடைந்தாலும், அடுத்த 28 நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 50..! சென்னை தந்த அதிர்ச்சி..!

கொரோனா குறித்த பீதி மக்களிடையே மிகுந்த ஆழத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தொடற்சியாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை குறித்த செய்தியை பார்த்து வரும் மக்களுக்கு இத்தகவல் உற்சாகத்தை அளித்துள்ளது. தனித்திருப்போம், கொரோனாவை விரட்டுவோம்.

அடுத்த செய்தி