ஆப்நகரம்

மாரியம்மன் கோவில் பூட்டை உடைத்து, அம்மன் கழுத்தில் இருந்த 5 சவரன் சங்கிலி திருட்டு!

கிருஷ்ணகிரி: அம்மன் கழுத்தில் இருந்த சங்கிலியை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

Samayam Tamil 24 Dec 2018, 7:15 pm
கிருஷ்ணகிரி அடுத்த தின்னகழனி பகுதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் இருக்கிறது. அங்கு நேற்று இரவு வழக்கம் போல் பூஜை முடிந்து, நடை சாத்தப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை கோவிலை திறக்க அர்ச்சகம் வந்தார். அப்போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனே உள்ளே சென்று பார்க்கும் போது, அம்மன் கழுத்தில் இருந்த 5 சவரன் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

உடனே கோவில் நிர்வாகம் சார்பில் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி