ஆப்நகரம்

சென்னை தனியார் குடோனில் 5,000 கிலோ குட்கா பறிமுதல்; மிரண்டு போன போலீசார்!

குடோன் ஒன்றில் பதுக்கப்பட்டிருந்த 5,000 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Samayam Tamil 21 Sep 2018, 3:24 pm
தமிழ்நாட்டில் கடந்த 2013ஆம் ஆண்டு குட்கா பொருட்களுக்கு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து 2016ஆம் ஆண்டு மதுரவாயல் குடோனில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
Samayam Tamil Gutka


அப்போது கைப்பற்றப்பட்ட குட்கா வியாபாரி மாதவராவ் டைரி மூலம், தமிழக அமைச்சர்கள், மூத்த காவல்துறை அதிகாரிகள், முக்கிய புள்ளிகளுக்கு லஞ்சம் அளிக்கப்பட்ட விவரம் வெளியானது. இதுதொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

இருப்பினும் குட்கா பொருட்கள் விற்பனை தமிழகத்தில் ஓய்ந்த பாடில்லை. பல்வேறு பகுதிகளில் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை நெமிலிச்சேரி பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.

அதில் 5,000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக முத்து ராஜ், முத்து மனோகர் ஆகிய சகோதரர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Five ton gutka captured, 2 arrested in Chennai.

அடுத்த செய்தி