ஆப்நகரம்

வேதாரண்யத்தில் நீச்சல் பயிற்சி: 5 இளைஞர்கள் நீரில் மூழ்கி பலி!!

நாகப்பட்டினத்தில் காணும் பொங்கலை முன்னிட்டு இன்று மாலை நீச்சல் போட்டியில் பங்கேற்க பயிற்சியில் ஈடுபட்டிருந்த 5 இளைஞர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

Samayam Tamil 16 Jan 2018, 2:25 pm
நாகப்பட்டினம்: நாகப்பட்டினத்தில் காணும் பொங்கலை முன்னிட்டு இன்று மாலை நீச்சல் போட்டியில் பங்கேற்க பயிற்சியில் ஈடுபட்டிருந்த 5 இளைஞர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
Samayam Tamil five youths drown in sea off vedaranyam coast in tn while getting training for swimming competition
வேதாரண்யத்தில் நீச்சல் பயிற்சி: 5 இளைஞர்கள் நீரில் மூழ்கி பலி!!


நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் கடல் பகுதியில் இளைஞர்கள் இன்று காலை நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். ஆறுகாட்டுத்துறையைச் சேர்ந்த சுமார் 20 இளைஞர்கள் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென இவர்களில் 5 பேர் நீரில் மூழ்கி பலியாயினர். 9 பேரை அங்கிருந்த மீனவர்கள் காப்பாற்றினர். இன்னும் காணாமல் போன 10 இளைஞர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

மீனவர்கள் மற்றும் கடலோர காவல் படையினர் இந்த இளைஞர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மீட்கப்பட்ட இளைஞர்கள் வேதாரண்யம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

பலியானவர்கள் பிரவீண் குமார், யோகராஜ், ஞானசேகர், பரத் மற்றும் ராஜமாணிக்கம் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும் 18-20 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.

காணும் பொங்கலை முன்னிட்டு இன்று மாலை நடைபெறவிருக்கும் நீச்சல் போட்டியில் கலந்து கொள்ள இவர்கள் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். இந்த நிலையில் சோக சம்பவம் நடந்துள்ளது.

அடுத்த செய்தி