ஆப்நகரம்

கஷ்டப்பட்டு காளையை அடக்கிய வீரர்களுக்கு விமான டிக்கெட் பரிசு!

திண்டுக்கல் அருகே நடந்த ஜல்லிகட்டுப் போட்டியில் காளையை அடக்கிய 8 வீரர்களுக்கு விமான டிக்கெட் பரிசாக அளிக்கப்பட்டது.

Samayam Tamil 10 Feb 2018, 5:26 am
திண்டுக்கல் அருகே நடந்த ஜல்லிகட்டுப் போட்டியில் காளையை அடக்கிய 8 வீரர்களுக்கு விமான டிக்கெட் பரிசாக அளிக்கப்பட்டது.
Samayam Tamil flight ticket gifted to jallikattu players in dindigul
கஷ்டப்பட்டு காளையை அடக்கிய வீரர்களுக்கு விமான டிக்கெட் பரிசு!


திண்டுக்கல் அருகிலுள்ள கொசவப்பட்டியில் புனித அந்தோணியார் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடந்தது. இந்த ஜல்லிக்கட்டில் திண்டுக்கல், மதுரை, திருச்சி, ஈரோடு ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்தன.

சீறிப்பாய்ந்த 500க்கும் மேற்பட்ட காளைகளை அடக்க 400க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. காளையை அடக்க ஒரு சுற்றுக்கு 150 வீரர்கள் வீதம் அளிக்கபட்டது. விறுவிறுப்பாக நடந்த இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில், காளையை அடக்கி தங்களது திறமைகளை வெளிப்படுத்திய வீரர்களுக்கு கட்டில், பீரோ, சைக்கிள், பாத்திரங்கள் போன்றவை பரிசாக வழங்கப்பட்டன. மேலும், சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு மதுரையிலிருந்து சென்னை செல்வதற்கான விமான டிக்கெட்டும் பரிசாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவர்களைத் தவிர, ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 53 பேர் காயம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி